ஓம் முருகா
வேலும் மயிலும் துணை
வேலும் மயிலும் துணை
ஸ்ரீ வள்ளிமலை ஸச்சிதானந்த ஸ்வாமிகள் தொகுத்தருளிய
திருப்புகழ் கோ புஜை
திருப்புகழ் கோ புஜை
திருப்புகழ்
ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள
ரந்திபக லற்றநினை வருள்வாயே
அம்புவிதனக் குள்வளர் செந்தமிழ்வழுத்தியுனை
அன்பொடுது திக்கமனம் அருள்வாயே
தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
சந்திரவெ ளிக்குவழி யருள்வாயே
தண்டிகைக னப்பவுசு எண்டிசை மதிக்கவளர்
சம்ப்ரமவி தத்துடனே யருள்வாயே
மங்கையர் சுகத்தைவெகு இங்கிதமெனுற்றமனம்
உன்றனைநி னைத்தமைய அருள்வாயே
மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரக்ஷைபுரி
வந்தனைய புத்தியினை யருள்வாயே
கொங்கிலுயிர் பெற்றுவளர் தெங்கரையிலப்பரருள்
கொண்டுஉட லுற்றபொரு ளருள்வாயே
குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு
கொங்கணகி ரிக்குள்வளர் பெருமாளே
ரந்திபக லற்றநினை வருள்வாயே
அம்புவிதனக் குள்வளர் செந்தமிழ்வழுத்தியுனை
அன்பொடுது திக்கமனம் அருள்வாயே
தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
சந்திரவெ ளிக்குவழி யருள்வாயே
தண்டிகைக னப்பவுசு எண்டிசை மதிக்கவளர்
சம்ப்ரமவி தத்துடனே யருள்வாயே
மங்கையர் சுகத்தைவெகு இங்கிதமெனுற்றமனம்
உன்றனைநி னைத்தமைய அருள்வாயே
மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரக்ஷைபுரி
வந்தனைய புத்தியினை யருள்வாயே
கொங்கிலுயிர் பெற்றுவளர் தெங்கரையிலப்பரருள்
கொண்டுஉட லுற்றபொரு ளருள்வாயே
குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு
கொங்கணகி ரிக்குள்வளர் பெருமாளே
கந்தர் அந்தாதி
சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்த செந்திற்
சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்த வென்னிற்
சேயவன் புந்தி பனிப்பாநு வெள்ளிபொன் செங்கதிரோன்
சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே
சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்த செந்திற்
சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்த வென்னிற்
சேயவன் புந்தி பனிப்பாநு வெள்ளிபொன் செங்கதிரோன்
சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே
தேவேந்திர சங்க வகுப்பு
தரணியி லரணிய முரணிர னியனுடல் தனைநக நுதிகொடு
சாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி
தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை
தாதாம்புய மந்திர வேதாந்தப ரம்பரை
சரிவளை விரிசடை யெரிபுரை வடிவினள் சத்தள முகுளித
தாமாங்குச மென்றிரு தாளாந்தர அம்பிகை
தருபதி சுரரொடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி
தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி
இரணகி ரணமட மயின்ம்ருக மதபுள கிதவிள முலையிள
நீர்தாங்கிநு டங்கிய நூல்போன்றம ருங்கினள்
இறுகிய சிறுபிறை யெயிறுடை யமபட ரெனதுயிர் கொளவரின்
யானேங்குதல் கண்டெதிர் தானேன்று கொளுங்குயில்
இடுபலி கொடுதிரி யிரவல ரிடர்கெட விடுமன கரதல
ஏகாம்பரை இந்திரை மோகாங்கசு மங்கலை
எழுதிய படமெனவிருளறு சுடரடி யினை தொழுமவுனிக
ளேகாந்தசு கந்தரு பாசாங்குச சுந்தரி
சாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி
தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை
தாதாம்புய மந்திர வேதாந்தப ரம்பரை
சரிவளை விரிசடை யெரிபுரை வடிவினள் சத்தள முகுளித
தாமாங்குச மென்றிரு தாளாந்தர அம்பிகை
தருபதி சுரரொடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி
தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி
இரணகி ரணமட மயின்ம்ருக மதபுள கிதவிள முலையிள
நீர்தாங்கிநு டங்கிய நூல்போன்றம ருங்கினள்
இறுகிய சிறுபிறை யெயிறுடை யமபட ரெனதுயிர் கொளவரின்
யானேங்குதல் கண்டெதிர் தானேன்று கொளுங்குயில்
இடுபலி கொடுதிரி யிரவல ரிடர்கெட விடுமன கரதல
ஏகாம்பரை இந்திரை மோகாங்கசு மங்கலை
எழுதிய படமெனவிருளறு சுடரடி யினை தொழுமவுனிக
ளேகாந்தசு கந்தரு பாசாங்குச சுந்தரி
கரணமு மரணமு மலமொடு முடல்படு கடுவினை கெடநினை
காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ்
கனலெரி கணபண குணமணி யணிபணி கனவளை மரகத
காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள்
கனகழ னினையல ருயிரவி பயிரவி கவுரிக மலைகுழை
காதார்ந்தசெ ழுங்கழுநீர் தோய்ந்தபெ ருந்திரு
கரைபொழி திருமுக கருணையி லுலகெழு கடனிலை பெற
வளர் காவேந்திய பைங்கிளி மாசாம்பவி தந்தவன்
அரணெடு வடவரை யடியொடு பொடிபட வலைகடல்கெட
வயில் வேல் வாங்கிய செந்தமிழ் நூலோன் குமரன் குகன்
அறுமுக னொருபதொ டிருபுயனபிநவ னழகிய குறமக
டார்வேய்ந்தபு யன்பகை யாமாந்தர்க ளந்தகன்
அடன்மிகு கடதட விகடித மதகளி றனவர தமுமக லாமா
ந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில்
அதிபதி யெனவரு பொருதிறன் முருகனை யருள்பட மொழிபவ
ராராய்ந்துவ ணங்குவர் தேவேந்திர சங்கமே
கந்தர் அலங்காரம்
கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன்கந்த வேல்முருகா
நதிதனை யன்னபொய் வாழ்விலன் பாய்நரம் பாற்பொதிந்த
பொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனைப் போதவிட்ட
விதிதனை நொந்துநொந் திங்ககேயென் றன்மனம் வேகின்றதே
காவிக் கமலக் கழலுடன் சேர்த்த்னைக் காத்தருள்வாய்
தூவிக் குலமயில் வாகன னேதுணை யேதுமின்றித்
தாவிப் படரக் கொழுகொம்பிலாத தனிக்கொடிபோற்
பாவித் தனிமனந் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே
கந்தர் அநுபூதி
ஆதா ரமிலேம னருளைப் பெறவே
நீதானொரு சற்று நினைந்திலையே
வேதாகம ஞான விநோதமநோ
தீதா சுரலோக சிகாமணியே
எந்தாயு மெனக் கருள் தந்தையுநீ
சிந்தா குல மானவை தீர்தெனையாள்
கந்தா கதிர்வே லவனே யுமையாள்
மைந்தா குமரா மறைநா யகனே
உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணிய யொளியாய்க்
கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
ஸ்ரீ கிருஷ்ண பகவான் பூலோகத்த்ற் பசுக் கூட்டங்களைக் காப்பாற்றியும் அவைகளுக்குத் தன் பேரன்பைக்காட்டியும் பணி செய்தும் வந்த விஷயம் யாவரும் அறிந்ததே. மணிமேகலை யென்னும் சங்க நூலில் ஆபுத்திரனென்பவன் திக்கற்றவனாயிருந்து ஒரு பசுவுக்கு உதவி புரிந்தமையால் சக்கரவர்த்திப் பதவியை யடைந்தான். சண்டேசுர நாயனார், திருமூல நாயனார் சுவின் பெருமை நன்கு விளங்கும். சிவ தருமோத்திரம் என்னும் நூலிசுவின் பெருமை விரித்துக் கூறப்பட்டுள்ளது. ஆதலால் ஒவ்வொருவரும் தங்கள் இலலத்தில் பசுக்கள் இல்லாவிட்டாலும் பசு வைத்திருப்பவர் வீட்டிற்குச் சென்றாகிலும் கோ பூஜை செய்தால் மிக்க நலமுண்டாகும். பூஜை செய்வோர்கள் மாலையில் சாம்ப்ராணி தீபமிட்டுப் பசுவின் பின் புறத்தில் ஆரத்தி செய்து நமஸ்கரிக்கவும்.
கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன்கந்த வேல்முருகா
நதிதனை யன்னபொய் வாழ்விலன் பாய்நரம் பாற்பொதிந்த
பொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனைப் போதவிட்ட
விதிதனை நொந்துநொந் திங்ககேயென் றன்மனம் வேகின்றதே
காவிக் கமலக் கழலுடன் சேர்த்த்னைக் காத்தருள்வாய்
தூவிக் குலமயில் வாகன னேதுணை யேதுமின்றித்
தாவிப் படரக் கொழுகொம்பிலாத தனிக்கொடிபோற்
பாவித் தனிமனந் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே
கந்தர் அநுபூதி
ஆதா ரமிலேம னருளைப் பெறவே
நீதானொரு சற்று நினைந்திலையே
வேதாகம ஞான விநோதமநோ
தீதா சுரலோக சிகாமணியே
எந்தாயு மெனக் கருள் தந்தையுநீ
சிந்தா குல மானவை தீர்தெனையாள்
கந்தா கதிர்வே லவனே யுமையாள்
மைந்தா குமரா மறைநா யகனே
உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணிய யொளியாய்க்
கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
ஸ்ரீ கிருஷ்ண பகவான் பூலோகத்த்ற் பசுக் கூட்டங்களைக் காப்பாற்றியும் அவைகளுக்குத் தன் பேரன்பைக்காட்டியும் பணி செய்தும் வந்த விஷயம் யாவரும் அறிந்ததே. மணிமேகலை யென்னும் சங்க நூலில் ஆபுத்திரனென்பவன் திக்கற்றவனாயிருந்து ஒரு பசுவுக்கு உதவி புரிந்தமையால் சக்கரவர்த்திப் பதவியை யடைந்தான். சண்டேசுர நாயனார், திருமூல நாயனார் சுவின் பெருமை நன்கு விளங்கும். சிவ தருமோத்திரம் என்னும் நூலிசுவின் பெருமை விரித்துக் கூறப்பட்டுள்ளது. ஆதலால் ஒவ்வொருவரும் தங்கள் இலலத்தில் பசுக்கள் இல்லாவிட்டாலும் பசு வைத்திருப்பவர் வீட்டிற்குச் சென்றாகிலும் கோ பூஜை செய்தால் மிக்க நலமுண்டாகும். பூஜை செய்வோர்கள் மாலையில் சாம்ப்ராணி தீபமிட்டுப் பசுவின் பின் புறத்தில் ஆரத்தி செய்து நமஸ்கரிக்கவும்.
சுபம்
பின் குறிப்பு
இந்த நூல் திருப்புகழடிமை-ஸ்ரீ.கா.ரா.முருகேசப் பிள்ளை அவர்களால் வெளியிடப்பட்டது.
இந்த நூல் திருப்புகழடிமை-ஸ்ரீ.கா.ரா.முருகேசப் பிள்ளை அவர்களால் வெளியிடப்பட்டது.
a good work indeed
ReplyDelete